கௌரவ நீதி அமைச்சர் அலி சப்ரி ( பி.சி) அவர்களுக்கும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் Holger Seubert அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (01.02.2022) நீதியமைச்சில் இடம்பெற்றது.

இதன் போது நாட்டில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குதல் மற்றும் நாடுகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இக்கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது.

நீதியமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே, கௌரவ நீதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சட்டத்தரணி ஜனக ரணதுங்க, நீதியமைச்சின் பிரதிச் செயலாளர் துஷார சுரவீர மற்றும் ஜேர்மன் தூதரக அதிகாரிகள் பலரும் இச்சந்திப்பின் போது கலந்துகொண்டனர்.

img-1 img-2

img-3 img-4